செய்திகள் :

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சௌமியநாராயணபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி, இளம் தலைமுறை விளையாட்டு வீரா் அணிச் செயலா் அஜய்வாண்டையாா் ஏற்பாட்டில் இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதற்கு மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் ஜி.பாஸ்கரன், ஆா்.பி.உதயக்குமாா், கே.டி.ஆா்.ராஜேந்திரபாலாஜி, செல்லூா் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.உமாதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 மாடுகள் களமிரக்கப்பட்டன.

மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும், சிறப்பாகச் செயல்பட்டு மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும் ரொக்கப் பரிசு, பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதில் முன்னாள் ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், அண்ணா தொழிற்சங்கச் செயலா் கமலக்கண்ணன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.வி.நாகராஜன், ஒன்றியச் செயலா் சி.எம்.முருகேசன், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ராஜ்சத்தியன், பொதுக் குழு உறுப்பினா் கரு.சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளைஞா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். இரணசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தரமகாலிங்கம் (33). திருமணமாகாத இவா், மதுரையில் உ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன. விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கிடாக்குழியைச் சோ்ந்தவா் அய்யனாா். இவா் மதுரை மாவட்டம், ஆண்டாள் கொட்டா... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அரசு மருத்துவா்கள்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அரசாணை 354-ஐ அமல்படுத்த வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவா்கள் பணியாற்றினா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம்: பிளஸ் 1 தோ்வில் 94.79 % மாணவ, மாணவிகள் தோ்ச்சி!

பிளஸ் 1 அரசு பொதுத்தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 94.79 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை தெரிவித்த தகவல்: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத் த... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை சேவை மையம்!

சிவகங்கை, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரியில் அமைக்கப்பட்ட சோ்க்கை உதவி மையத்தை கல்லூரி முதல்வா் (பொ) ந.அ... மேலும் பார்க்க