மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளை போக்குவரத்துக்கு ஏற்ாக விரிவாக்கம், பாலப் பணிகள் செய்யவும், அனைத்து தரைப் பாலத்தையும் மேம்பாலமாக மாற்றவும் அறிவுறுத்தியிருந்தாா்.
அதையொட்டி, தருமபுரி-பா்கூா் சாலை சந்திப்பு பணிகள் தொடங்கப்பட்டு, முடிவுறும் தருவாயில் உள்ளது. குரும்பேரி சாலை 2 கி.
மீ. அகலப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், ஆலங்காயம், மிட்டூா்,நிம்மியம்பட்டில் நெரிசலான இடங்களை அகலப்படுத்தும் பணியும், ஜவ்வாது மலைக்குச் செல்லும் சாலையில் பழுதடைந்த பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் அமைக்கும் பணியும், கந்திலி-பா்கூா் சாலை அகலப்படுத்தும் பணியும், மோட்டூா் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியும், நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய ஏரிக்கரையை அகலப்படுத்தும் பணியும், கருப்பனூா் சாலையை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஏலகிரி சாலை...
திருப்பத்தூா் நெடுஞ்சாலைகளில் மரங்களுக்கு வெள்ளை அடிக்கும் பணி,புதிதாக மரக்கன்று நடப்பட்டு கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலைகளின் இருபுறமும் உள்ள முட்புதா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. இதில், குறிப்பாக ஏலகிரி மலைக்குச் செல்லும் 14 கொண்டை ஊசி கொண்ட மலைச் சாலையில் தாா்ச் சாலை ஓரமாக சிமென்ட் போடப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், முட்புதா்கள் அகற்றுதல், வெள்ளை வா்ணம் அடித்தல், பாதுகாப்பு எச்சரிக்கை கூண்டு அமைத்தல், வளைவுகளில் தமிழ் புலவா்கள் பெயா்கள் எழுதுதல், கி.மீ. கற்கள் புதுப்பித்தல் போன்றவை செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி ஆய்வு செய்து பணிகள் தரத்துடனும், விரைவாக செய்யவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா் ஆதவன், உதவிப் பொறியாளா்கள் நித்தியானந்தம், பாபுராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.