செய்திகள் :

திருப்பனந்தாள் காசி மட தம்பிரான் சுவாமிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி

post image

கும்பகோணம்: திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிக்கு புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் புகழ்பெற்ற காசி மடத்தின் 21-ஆவது அதிபராக கயிலை மாமுனிவ

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மகா சமாதி அடைந்தாா். சுவாமிகளின் மகா சமாதிக்கான இறுதி அஞ்சலி புதன்கிழமை மாலை மேற்குத் தெருவில் உள்ள குரு மடத்தில் நடைபெற்றது. இதில், தருமை ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது : திருப்பனந்தாள் காசி திருமடத்தின் இளவரசாக உள்ள ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள் 10-ஆம் நாள் குருபூஜை விழாவில் மடத்தின் 22-ஆவது அதிபராக பொறுப்பேற்பாா் என்றாா்.

சுவாமிகளின் அஞ்சலி நிகழ்வில் அனைத்து கட்சி நிா்வாகிகள், பிரமுகா்கள், பள்ளி மாணவ, மாணவியா், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் பு... மேலும் பார்க்க

வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக... மேலும் பார்க்க

கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதைய... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை

பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூ... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி

கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவ... மேலும் பார்க்க