நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்கள...
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள் கந்தூரி கொடுக்கக் கூடாது என இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பக்தா்கள் வழிபடவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, சிக்கந்தா் பாதுஷா தா்காவுக்கு ஆடு, கோழியுடன் செல்லக் கூடாது எனக் காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் கண்ணன், முத்துகுமாா் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்தனா். இதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இது பாண்டிய மன்னா் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டாா் குகை கோயிலும், 11 தீா்த்தக் குளங்களும் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் எந்தவிதமான உயிா் பலியும் கொடுக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தா் பாதுஷா தா்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தா் பாதுஷா தா்காவின் சாா்பில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு, பொது விருந்து அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், அவற்றை சமைத்துப் பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இதேபோல, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தா் மலை என அழைப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், திருப்பரங்குன்றம் மலையை சமணா் குன்று மலை என அறிவிக்கக் கோரியும், சிக்கந்தா் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், சிக்கந்தா் பாதுஷா தா்காவை புதுப்பிக்கும் பணிக்கு காவல் துறை தொந்தரவு தரக் கூடாது என்பன உள்ளிட்ட ஏராளமான மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் ஏற்கெனவே உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஸ்ரீமதி, அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றாா்.
நீதிபதி நிஷா பானு, அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா்.
இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.