செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக அமைச்சர்களுக்கு அண்ணாமலை கண்டனம்?

post image

திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவினரை குற்றம் சாட்டிய அமைச்சர்களின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ரகுபதியும் கூறினர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது ``திருப்பரங்குன்றத்தின் வரலாறு குறித்து அமைச்சர் சேகர்பாபு அறிந்துகொள்ள வேண்டும். இதே வழக்கை 1931 ஆம் ஆண்டில் விசாரித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆங்கிலேயர் காலத்திலேயே ஹிந்துகளுக்காக தற்காக்கப்பட்ட கோவிலைக் கொடுக்க திமுக தயாராக இருக்கிறது.

இதனிடையே, 350-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பாஜகவினரை பெரியாளாக வளர்த்து விடுவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி. நீதிமன்ற அறிவிப்புக்குப் பின்னரே, பாஜகவினர் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.

அமைச்சராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசுதல் கூடாது. வார்த்தைகளைச் சரியாக பயன்படுத்துதல் வேண்டும். அமைச்சர் அடக்குவதாய் கூறும் யாரும் கஞ்சா விற்கவோ, பெண்களைத் துன்புறுத்தவோ இல்லை. இவர்கள் முருக பக்தர்கள். முதலில், கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில், முருக பக்தர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக அமைச்சர்கள் கூறுவது வெட்கக்கேடு. முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள்’’ என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அதன் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆள்களுடன் வந்தார். அப்போது எம்.பி.யுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிலிருந்து திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்கு ஆளானது.

இதையும் படிக்க:திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!

தஞ்சைக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (பிப்.10) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி, விடுமுறை விடப்படுவதாகவும் விடுமுற... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மே... மேலும் பார்க்க

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை: ஆர்எஸ் பாரதி

மதம், இனத்தின் பெயரால் பிரச்னையை ஏற்படுத்துவதுதான் பாஜக வேலை என்று திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேடடியி... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 3 லட்சம் நிதி

வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில், வசித்து... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 470 படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்க... மேலும் பார்க்க