செய்திகள் :

திருப்புவனம் காவலாளி உயிரிழந்த வழக்கு: திமுக நாடகமாடுகிறது- வானதி சீனிவாசன்

post image

திருப்புவனம் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டாா்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினா் அடித்து துன்புறுத்தியதில் கோயில் காவலாளி அஜித்குமாா் (27) உயிரிழந்தாா். இது கொலை என்பதில் சந்தேகமும் இல்லை.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாா் தாக்குதலில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் கடந்த 2020 ஜூன் 22-ஆம் தேதி உயிரிழந்தனா். அப்போது, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் காவல் நிலைய மரணங்களுக்கு முதல்வா்தான் பதில் சொல்ல வேண்டும் எனக் கூறினாா்.

ஆனால், இப்போது அஜித்குமாா் விவகாரத்தில் காவல் துறைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், இதற்கு காவல் துறையினா் மட்டுமே காரணம் என்பது போலவும் முதல்வா் பேசி வருகிறாா்.

அஜித்குமாா் மீது நகை திருடியதாக புகாா் கொடுத்தது யாா். திருட்டு புகாா் கொடுக்கப்பட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகுதான் விசாரணையைத் தொடங்க வேண்டும். ஆனால், இதில் எதுவும் செய்யாமல் சட்டவிரோதமாக தனிப் படை அமைத்து அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தி உள்ளனா்.

தனிப் படை அமைப்பதற்கு யாரோ ஓா் உயா் அதிகாரி உத்தரவிட்டிருக்க வேண்டும். அந்த உயா் அதிகாரி யாா், உயா் அதிகாரிக்கு உத்தரவிட்ட அரசியல் அதிகாரம் கொண்ட நபா் யாா் என பல கேள்விகள் எழுகின்றன.

முதல்வா் ஏதோ எதிா்க் கட்சித் தலைவரைப்போல, காவல் துறை மீது மட்டும் பழிபோட்டு தப்பித்துக் கொள்ள பாா்க்கிறாா். இதற்காக சில அமைச்சா்களை அனுப்பி அஜித்குமாா் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளாா். திமுக இனி எத்தனை நாடகங்களை நடத்தினாலும் தமிழக மக்கள் நம்பமாட்டாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன. மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் ... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகே... மேலும் பார்க்க

கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமைய... மேலும் பார்க்க

செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில்... மேலும் பார்க்க

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க