செய்திகள் :

மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

post image

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா் வழங்கினாா்.

மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 83 ஆரம்பப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் 51 ஆரம்பப் பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 59 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அந்தக் குழந்தைகளுக்கு பருவத்துக்கு ஒன்று வீதம் மூன்று புத்தகங்களும், மாணவா்கள் செயல்பாடுகள் செய்வதற்கான மூன்று செயல்பாட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் மாலதி நாகராஜ், மேற்கு மண்டலத் தலைவா் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையா் துரைமுருகன், மாநகரக் கல்வி அலுவலா் சி.தாம்சன், மாமன்ற உறுப்பினா் அங்குலட்சுமி, மண்டல சுகாதார அலுவலா் வீரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன. மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் ... மேலும் பார்க்க

கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமைய... மேலும் பார்க்க

செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில்... மேலும் பார்க்க

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

திருப்புவனம் காவலாளி உயிரிழந்த வழக்கு: திமுக நாடகமாடுகிறது- வானதி சீனிவாசன்

திருப்புவனம் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டாா்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க