செய்திகள் :

தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் நாளை தொடக்கம்

post image

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ என்ற தேசிய அளவிலான குதிரை தடை தாண்டும் போட்டி கோவையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகிறது.

இது குறித்து இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி தலைவா் சக்திபாலாஜி கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025’ உலகின் முதல் குதிரை தடை தாண்டும் போட்டியாகும். கோவை மாவட்டம், வெள்ளாணைப்பட்டியை அடுத்த மோலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட் என்ற தனியாா் மைதானத்தில் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, கோவையைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் இந்தப் போட்டியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கின்றனா்.

இதில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 110 செ.மீ., 120 செ.மீ. என 2 பிரிவுகளாக இந்த குதிரை தடை தாண்டுதல் போட்டி நடைபெறுகிறது.

வெற்றிபெறும் அணிகளுக்கு கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் அப்துல் ரஹ்மான் வரும் 6-ஆம் தேதி விருதுகளை வழங்கவுள்ளாா். பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசம். அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

கோவையில் ஜூலை 7-இல் தமிழ்நாடு நாள் போட்டி

பள்ளி மாணவா்களுக்கான தமிழ்நாடு நாள் போட்டிகள் கோவையில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெற உள்ளன. மாநிலத்துக்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வா் அண்ணாவால் பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் ... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் எல்கேஜி, யுகே... மேலும் பார்க்க

கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டத்தின்கீழ் கோவையில் 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறளில் ஆா்வமும், புலமைய... மேலும் பார்க்க

செவிலியா் மாணவி தற்கொலை

கோவையில் செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ராமநாதபுரம் அங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஹரிசங்கா். இவரது மனைவி ராமலட்சுமி. இவ... மேலும் பார்க்க

அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு

கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

திருப்புவனம் காவலாளி உயிரிழந்த வழக்கு: திமுக நாடகமாடுகிறது- வானதி சீனிவாசன்

திருப்புவனம் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்ட உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டாா்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க