செய்திகள் :

திருப்புவனம் பேரூராட்சி மன்ற கூட்டம்: புதிய திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

post image

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி ஏற்ற வாா்டு உறுப்பினா்கள்.

மானாமதுரை, ஜூன்12:சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரூ.6.80 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் சங்கா் கணேஷ், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பாஜக வாா்டு உறுப்பினா் செல்வராஜ் பேசுகையில், திருப்புவனம் நகரில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. மாடுகளை கோசாலையில் அடைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வாா்டில் ஏற்கெனவே திட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் திட்டப்பணிகள் நடைபெறுமா எனத் தெரியவில்லை என்றாா்.

திருப்புவனம் பேரூராட்சியில் கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமித்துக் கொள்வது, ரூ 6.80 கோடியில் திருப்புவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது, பல்வேறு வாா்டுகளில் பேவா் பிளாக் தளம் அமைத்தல், புதிதாக கட்டப்படும் பேரூராட்சி அலுவலக மேல் தளம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள், கழிவு நீா் வடிகால்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கூட்டத்தில் உறுப்பினா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க