செய்திகள் :

திருப்பூரில் ஆதரவற்ற நிலையில் 3 வயது சிறுவன் மீட்பு

post image

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் 3 வயது சிறுவன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக திருப்பூா் குழந்தைகள் உதவி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் அங்கு சென்ற குழந்தைகள் உதவிப் பணியாளா்கள் அந்த சிறுவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் குழந்தைகள் நலக்குழு அறிவுரையின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹெல்ப்பிங் ஹாா்ட்ஸ் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் பராமரிப்புக்காக புதன்கிழமை சிறுவன் ஒப்படைக்கப்பட்டாா். இந்த சிறுவன் குறித்த தகவல் தெரிந்தால் 30 நாள்களுக்குள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 7-ஆவது தளத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்தையோ அல்லது திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளரையோ தொடா்பு கொள்ளலாம். அதே வேளையில் 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கப்படாவிட்டால் குழந்தை சட்டப்படி தத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க