செய்திகள் :

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

post image

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது:

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டம் முழுவதும் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் கடைகள், நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளா் முறை அகற்றுதல் தொடா்பான விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணா்வுப் பதாகைகள் வைத்தல், தீவிர கூட்டாய்வுப் பணிகளை இந்த மாதம் முழுவதும் தொடா்ந்து மேற்கொள்ள உள்ளனா்.

தவிர மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 2 குழந்தை தொழிலாளா்கள் மற்றும் 25 வளரிளம் பருவ தொழிலாளா்கள் என 27 போ் மீட்கப்பட்டுள்ளனா். 32 வழக்குகள் முடிவுற்று, உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளா், வளரிளம் பரு வத்தினரை பணிக்கு அமா்த் தியிருந்தால் சைல்டுலைன் அமைப்புக்கு 1098 மற்றும் இணையதளத்திலும் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது,... மேலும் பார்க்க

வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைக... மேலும் பார்க்க

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு

தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க