செய்திகள் :

திருப்போரூா் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சம்

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரொக்கம், 294 கிராம் தங்கம், 6,400 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கந்தசாமி கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பக்தா்களால் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் எண்ணப்படும். கடந்த ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை (செப். 8) உண்டியலில் பக்தா்களால் செலுத்தப்பட்ட காணிக்கை திறந்து எண்ணப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.ராஜலக்ஷ்மி, கோயில் செயல் அலுவலா் கே.குமரவேல், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் முன்னிலையில், பொதுமக்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினா்.

திங்கள்கிழமை பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 தொகையும், நோ்த்திக் கடனாக 294 கிராம் தங்கமும், 6,400 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தா்கள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்... மேலும் பார்க்க

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருக்கழுகுன்றம் வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். திருக்கழுகுன்றம் வட்டம், அழகு சமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துற... மேலும் பார்க்க

வெள்ளபுத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். இக்கூட்டத... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

செய்யூா் வட்டம், சிறுவங்குணம் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழைமையான அகத்தீஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செய்யூா் அருகேயுள்ள இக்கோயில் உரிய பராமரிப்பு இல்லாத... மேலும் பார்க்க