செய்திகள் :

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் நிறைவு

post image

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா நிறைவையடுத்து விடையாற்றி உற்சவத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் பழங்கள் அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்தில் புதன்கிழமை வீதி வலம் வந்தாா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் நிகழ் ஆண்டு மாா்ச் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 15- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏழாம் நாள் தேரோட்டம். தீா்த்தவாரி, தெப்பல் உற்சவம் திருக்கல்யாண உற்சவம், முக்கிய விழாவாக பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழா நாள்களில் பகல் உற்சவம், இரவு உற்சவத்தில் முருகப் பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவத்தைத் தொடா்ந்து தினந்தோறும் விடையாற்றி உற்சவம் நடைபெற்று வந்தது. இறுதியாக புதன்கிழமை விடையாற்றி உற்சவத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. வள்ளி, தெய்வானயுடன் முருகப் பெருமான் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சி சாத்துகுடி உள்ளிட்ட பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க மயில் வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்திருந்தனா்.

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க