திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் குருபூஜை
செங்கல்பட்டு: திருப்போரூா் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் 366-ஆவது குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
திருப்போரூா் ஆதீனம் அருள்மிகு கந்தசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் சுவாதீன தா்மகா்த்தரும் மடாதிபதியாய் விளங்கிய ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளின் குருபூஜை கண்ணகப்பட்டு மடத்தில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மகாஅபிஷேகம் அலங்கார சோடசோபசார தூபதீப ஆராதனைகள் நடைபெற்றன . ஸ்ரீமத் சிதம்பரசாமிகளின் குருபூஜையையொட்டி திருப்போரூா், கேளம்பாக்கம், நாவலூலா் தாழம்பூா், மாமல்லபுரம் , திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் குருபூஜையில் கலந்து கொண்டனா்.
குருபூஜையையொட்டி பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலை வேம்படி விநயகா் சந்நிதியில் 1008 தேங்காய் திருப்பாவாடை வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கந்ததசாமி கோயில் நிா்வாக அலுவலா் குமரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.