செய்திகள் :

திருமணம் மீறிய உறவுக்கு இடையூறான கணவன் கொலை!

post image

மத்தியப் பிரதேசத்தில் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஃபரத் கேடி கிராமத்தில் முகேஷ் மால்வியா என்பவரின் மனைவி மம்தா, ராகுல் மால்வியா வேறொருவருடன் திருமணம் மீறிய உறவு கொண்டிருந்ததால், இடையூறாக இருந்த கணவரை கொலை செய்யத் திட்டமிட்டார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி, ராகுலையும் அவரது நண்பர் சுனிலையும் வீட்டுக்கு அழைத்து, மூவரும் சேர்ந்து முகேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தின்போது, ராகுலின் விரலும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையிலும், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ராகுலின் விரலையும் வைத்து மம்தா, ராகுல், சுனில் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் தற்போதைய கவுன்சிலர்க... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகுடா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி பல்கலைக்கழகத்தின் 1... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட செய்யறிவால் மிகச் சிறப்பான எதிர்காலம் உருவாகும்: குடியரசுத் தலைவர்

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் துறைகளில் சிறப்பான எதிர்காலம் உருவாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மெஸ்ராவில் உள்ள பிர்லா தொழில்நுட்ப நிறுவ... மேலும் பார்க்க

வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்

இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் க... மேலும் பார்க்க

அதிகரிக்கும் ஜிபிஎஸ் நோய் தொற்று! கோலாப்பூரில் பலியான பெண்ணுக்கும் பாதிப்பா!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு இருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207-ஆக அதிகரித்துள்ளது.நேற்று(பிப். 14) வெள்ளிக்கிழமை 2 பேருக்கு ஜிபிஎஸ் நோய்... மேலும் பார்க்க

ஒரே இரவில் அடுத்தடுத்து விபத்துகள்: மகா கும்பமேளா பக்தர்கள் 15 பேர் பலி!

மகா கும்பமேளா தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் அடுத்தடுத்து வெவ்வேறான விபத்துகளில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கு சென்று பக்தர்கள் 10 பேருடன் திரும்பிய சுற்றுல... மேலும் பார்க்க