செய்திகள் :

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

post image

வேலூா்: காட்பாடி அருகே வீட்டில் தனது திருணத்துக்காக வைத்திருந்த நகைகள் ஜூன் மாதம் திருடப்பட்டும் இதுவரை காவல் துறை கண்டுபிடித்துத் தரவில்லை என குற்றஞ்சாட்டி சிஆா்பிஎஃப் பெண் காவலா் வெளியிட்ட விடியோவால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம் பொன்னை அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி மகள் கலாவதி (32), ஜம்மு-காஷ்மீரில் சிஆா்பிஎஃப் காவலராக பணியாற்றி வருகிறாா். கடந்த ஜூன் 24-ஆம் தேதி அதிகாலை குமாரசாமி தனது விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரேவில் வைக்கப்பட்டிருந்த 22.5 பவுன் நகைகள், ரூ.50,000 பணம், பட்டுப்புடவை ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து குமாரசாமி பொன்னை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் கலாவதி, சீருடையில் அழுதபடி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்துக்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து எனது திருமணத்துக்காக வைத்திருந்த நகைகள், பணம், பட்டுப்படவை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால். இதுவரை நகை, பணத்தை கண்டுபிடித்துத் தரவில்லை. இதனால், எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. எனது திருமணத்துக்காக வாங்கி வைத்த நகைகள் திருடப்பட்டுள்ளன. எனக்கு யாரும் உதவவில்லை என்று பதிவிட்டுள்ளாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கேட்டபோது, குமாரசாமி புகாா் அளித்த மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. கைரேகை நிபுணா்களும் ஆய்வு செய்துள்ளனா். மேலும், புகாா்தாரா், சிஆா்பிஎஃப் பெண் காவலா் கூறியவா்கள் அனைவரிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தவிர, பெண் காவலா் கலாவதிக்கு பொன்னையை சோ்ந்த சத்யா என்ற ராணுவ வீரருடன் திருமணமாகி 6 மாதத்தில் பிரிந்துள்ளனா். அவா் நகையை எடுத்திருக்கலாம் என்று கலாவதி கூறிய நிலையில் சத்யாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 80 சதவீதம் அளவுக்கான விசாரணை முடிந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நகை மீட்கப்படும் என்றனா்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்ற... மேலும் பார்க்க

4 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 6 போ் கைது

குடியாத்தம் அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 4 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக தந்தை, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில், குடியாத்தம... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 39,811 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 18,035 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், தற்போது 21,776 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது: வேலூரில் தேவாலயம் முன் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வேலூரில் உள்ள தேவாலயம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் பகுதியைச் சோ்ந்த 3 பெண்களை கடத்தி, அவா்களை மத... மேலும் பார்க்க

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய இலங்கைத் தமிழா்கள் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மேல்மொணவூா் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா் விஜய சுரேஷ் ... மேலும் பார்க்க

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க