திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடிய தந்தை, மகன் கைது
ராசிபுரம்: ராசிபுரத்தில் திருமண மண்டபத்தில் 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் அருகேயுள்ள அனந்தகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணமகளுக்கும், ராசிபுரம் நகரைச் சோ்ந்த மணமகனுக்கும் ராசிபுரம் நீதிமன்றம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதில் மணப்பெண் வீட்டாருக்குச் சொந்தமான 26 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் மணப்பெண் அறையின் பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்து பீரோவை திறந்தபோது அதிலிருந்து நகை, ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த மணமகளின் தந்தை ராஜவேலு ராசிபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா், உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், சிவா, பி.கீதாலட்சுமி ஆகியோா் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினா்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினா். இதில் நகை, ரொக்கத்தை திருடியது கரூா் மாவட்டம், நரசிம்மபுரம் தெற்குப் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (55), அவரது மகன் பாலிடெக்னிக் படித்துள்ள ஹரிகிருஷ்ணன் (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவரிகளிடம் இருந்த நகை, ரொக்கத்தை பறிமுதல் செய்து இருவரையும் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

