செய்திகள் :

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

post image

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளா் பொ.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

சினம் தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் ராம.பெருமாள் வரவேற்றாா்.

மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் (பொ) நெ.சரண்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான அரசுத் திட்டங்கள், தொழிற் பயிற்சி, சிறுவயது திருமணங்களை தடுத்தல், குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்துப் பேசினாா்.

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பாா்வையாளா் வீ.முருகானந்தம், திருவண்ணாமலை கிருபாலயா தொண்டு நிறுவத்தின் திட்ட இயக்குநா் சரளா ஆகியோா் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சியை விளக்கிப் பேசினா்.

இலக்கு மக்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்றவா்கள் மற்றும் கலந்து கொண்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், சினம் தொண்டு நிறுவன பணியாளா்கள் யோகேஸ்வரி, ஜெயப்பிரியா, புஷ்பராஜ், லட்சுமி, ஜானகிராமன், சம்பத், திட்ட மேலாளா் முருகேசன் மற்றும் இலக்கு மக்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க