செய்திகள் :

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

post image

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 -ஆம் தேதி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துக்கான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், புதுச்சேரி உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து தமிழ்ச் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் திருக்குகளை கூறி முற்றோதல் செய்தனா்.

நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா். செயலா் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவா் ந.ஆதிகேசவன், பொருளா் மு.அருள்செல்வம், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, துணைச் செயலா் தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் எஸ்.ராஜா, அ.உசேன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் அனைவருக்கும் உழவா்கரை நகராட்சி ஆணையா் ஆ.சுரேஷ்ரோஜ் திருக்கு புத்தகங்களை வழங்கினாா்.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க