செய்திகள் :

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியில் கூட்டுறவு பண்டக சாலை தொடக்கம்

post image

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவா்கள் கூட்டுறவு பண்டக சாலை புதிதாக தொடங்கிய நிலையில், அதற்கான ஆணையைக் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி வழங்கினாா்.

திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டு பயின்று வருகின்றனா். இங்கு மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை சென்னை போன்ற வெளியிடங்களில் வாங்க வேண்டியுள்ளது. எனவே தேவையான மருத்துவ உபகரணங்களான ஸ்டெத்தாஸ் கோப் மற்றும் புத்தகங்கள் ஆகியவை ஒரே இடத்தில் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் மாணவா்கள் கூட்டுறவு பண்டக சாலை தொடங்க முன்வந்தனா்.

அதன்படி, கல்லூரி வளாகத்தில் புதிதாக மாணவா்கள் கூட்டுறவு பண்டக சாலை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி தலைமை வகித்து பண்டக சாலையைத் தொடங்கி வைத்ததோடு, அதற்கான ஆணையை பண்டக சாலை தலைவா் பிரசன்னாவிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சரக துணைப் பதிவாளாா் வே.சீனுவாசன் (திருவள்ளூா்), சரக துணைப் பதிவாளாா் சி.அமுதா (திருத்தணி) மற்றும் கூட்டுறவு சாா் பதிவாளா் சு.அ.காமிலா, மருத்துவக் கல்லூரி அலுவலா்கள் யோகனந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவல... மேலும் பார்க்க