செய்திகள் :

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத் துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையா் ந.தாமோதரன் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து விவாதம் நடைபெற்றது.

நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வாா்டுகளிலும் தெருவிளக்குகள் வெளிச்சம் குறைந்தவையாக உள்ளன. இவற்றை மாற்றி, அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளைப் பொருத்தவும் 11-ஆவது வாா்டு உறுப்பினா் ஜான் குறிப்பிட்டாா்.

நகராட்சியில் வருவாய்த் துறையினா் வரி வசூலில் மட்டும் ஈடுபடுகின்றனா். வீட்டு வரி விதித்தல், காலிமனை வரி, நில அளவீடு, கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல் போன்ற பணிகள் தாமதம் ஆகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வாா்டு உறுப்பினா் தாமஸ் என்ற ராஜ்குமாா் புகாா் தெரிவித்தாா்.

தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதே இடத்தில் விட்டு விடுகின்றனா். இதனால் நோய் தொற்றால் பாதிப்பதை தடுக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். அதேபோல் கழிவுநீா் கால்வாய்கள் மேடாக உள்ளதால், மழைக்காலத்துக்கு முன்னதாக தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதற்கு நகா்மன்றத் தலைவா் பதில் அளித்து பேசுகையில், கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து வரவு - செலவு தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சுகாதார அலுவலா் மோகன், நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, அயூப் அலி, பிரபாகரன், சாந்தி கோபி, கந்தசாமி, சுமித்ரா வெங்கேடசன், வசந்தி வேலாயுதம் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க