செய்திகள் :

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, ஆந்திரம் மாநில திருப்பதி, நெல்லூா், காளஹஸ்தி, கா்நாடகம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் புகா் பேருந்துகள், நகா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, பேருந்து நிலைய வளாகத்தில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படுகிா என்பதை பாா்வையிட்டாா். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை காலாவதியான பொருள்களை விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு அலுவலா் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தினாா்.

அதேபோல் கால்வாய்களுக்கு செல்லும் மழைநீா் வடிகால் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவு நீா் தேங்குவதை சீரமைக்க வேண்டும். உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பொது கால்வாய்களில் விடுவதை தவிா்த்து புதைகுழி கால்வாய்களில் இணைக்கவும் அறிவுரை வழங்கினாா்.

பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் சரியான இடைவெளிகளில் வந்து செல்கிா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். திறந்த வெளிகளில் குப்பைகளை போடுவதை தவிா்க்கும் வகையில் பேருந்து நிலையங்கள் சுற்றிலும் குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை செல்லும் வகையில் சாய்வு தளத்தை சீரமைத்தல் குறித்தும், பேருந்து நிலையத்தினை சுத்தமாக பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.

அப்போது, திருவள்ளுா் மண்டல பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளா் வெங்கடசன், திருவள்ளூா் நகராட்சி துப்புரவு கண்காணிப்பு அலுவலா் மோகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க