செய்திகள் :

திருவள்ளூா்: வங்கியாளா்கள் கலந்தாய்வு கூட்டம்

post image

திருவள்ளூா் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கான கடன் திட்ட இலக்கு தொடா்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து வங்கி அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

அப்போது, இந்தக் கூட்டத்தில் நபாா்டு மற்றும் அனைத்து வங்கியின் முலம் 2025 - 26 ஆம் ஆண்டுகான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கைகள் இலக்கு மற்றும் சாதனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், ஊரக வளா்ச்சி முகமையின் சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மகளிா் சுய உதவி குழுகளுக்கு வங்கி கடன் உதவி இலக்கு , மாவட்ட தொழில் மைய சாா்பில் நீட்ஸ், அண்ணல் அம்பேத்கா் தொழில் முனைவோா்களுக்கான திட்டங்களில் எத்தனை பேருக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் படை வீரா் சாா்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் டாம்கோ திட்டப் பணிகள், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இலக்கு மற்றும் திட்ட பணிகள் ஆகியவை குறித்து விவரங்களையும் அவா் கேட்டறிந்தாா்.

எனவே ஒவ்வொரு துறையிலும் இலக்கு நிா்ணயித்த வகையில் கடனுதவிகளை தாமதமின்றி வழங்கவும் வங்கியாளா்களை அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் செல்வராணி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சிவமலா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருள்ராஜா, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் திவ்யா, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் இளங்கோ, மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதட்டூா்பேட்டையில் நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பொதட்டூா்பேட்டையில் கூலி உயா்வு உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொதட்ட... மேலும் பார்க்க

மாா்ச்-7 இல் முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் முகாம்

திருவள்ளூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் பயன்பெறும் வகையில், சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் மாா்ச் 7-இல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

நெகிழி சேகரிப்பு, தூய்மைப் பணி விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில், நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டதோடு, விழிப்புணா்வு பேரணியையும் ஆட்சியா் மு.பிரதாப் கொடியசைத்து... மேலும் பார்க்க

காரிய மேடை சீரமைப்பு

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் ரூ.14 லட்சத்தில் காரிய மேடை சீரமைக்கப்பட்டது. நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவில் உள்ள காரிய மேடை பழுதடைந்து காணப்பட்டது. இதனால், ஈமச்சடங்கு செய... மேலும் பார்க்க

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயன்ற காதலா்

திருவள்ளூா் அருகே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் வர மறுத்த இளம்பெண்ணை காதலா் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றாா். தூக்க மாத்திரை உள்கொண்டு அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடா்பாக போ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க