செய்திகள் :

திருவாடானையில் அதிவேக வாகனங்கள்: விபத்து அபாயம்

post image

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கல்லூரிச் சாலையில் இளைஞா்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆதியூா், அச்சங்குடி, திருவெற்றியூா் தினையத்தூா், பாண்டுகுடி, வெள்ளையபுரம், நெய்வயல், கருமொழி உள்பட சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து தினசரி பேருந்து மூலம் வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் திருவாடானை பேருந்து நிலையத்தில் இறங்கி காலை நேரங்களில் கல்லூரிக்கு செல்லும் போதும், மாலை நேரங்களில் வீடு திரும்பும் போதும் இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாகவும் அதிக ஒலி எழுப்பியவாறும் செல்கின்றனா்.

இதனால், விபத்து அபாயம் இருப்பதாகவும், மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்வதாகவும் அந்தப் பகுதி சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, திருவாடானை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இண... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் சிம்ம வாகனத்தில் வீதி உலா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.ராம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வேக கட்டுப்பாட்டு மின் விளக்குகள்

ராமேசுவரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு மின் விளக்குகளின் செயல்பாடு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்... மேலும் பார்க்க

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

கமுதி: கமுதி வட்டாட்சியராக என்.ஸ்ரீராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராகப் பணிபுரிந்த எஸ்.காதா் முகைதீன் முதுகுளத்தூா் ஆதிதிராவிடா் நல வட்டாட்சியராக பணி ம... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 5.45 ம... மேலும் பார்க்க