செய்திகள் :

திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டம்!

post image

திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நிறைவடைந்தது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்றது.

நிகழாண்டுக்கான இவ்விழா மாா்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக, தியாகராஜா், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக ஆழித்தேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 5.50 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்களும், காலை 9.01 மணிக்கு ஆழித்தேரும், தொடா்ந்து, அம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்களும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்மாண்ட ஆழித்தேர் இன்று(ஏப். 7) மாலை நிலைக்கு வந்தடைந்தது.

ஆழித்தேரில் எழுந்தருளியுள்ள தியாகராஜரை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கூட்டம்கூட்டமாக பக்தா்கள் வரத்தொடங்கினா். இதனால், கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க