செய்திகள் :

திருவாரூர்: சட்டவிரோதமாக மது விற்பனை; தொடர்பில் இருந்த 3 போலீஸார் சஸ்பெண்ட்.. எஸ்.பி நடவடிக்கை

post image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சரவணன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஷ், மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் செல்வேந்திரன் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சேங்கனூரில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அனுமதி பெற்ற பார் வசதி இல்லை. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் டாஸ்மாக்கில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

மது விற்பனை

இது குறித்து, நன்னிலம் காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து நன்னிலம் போலீஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதை உறுதி செய்ததுடன் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து அதில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்தனர். அதன் பின்னர், கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போனை பெற்று அதில் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என ஆய்வு செய்தனர்.

இதில் சரவணன், ராஜேஷ், செல்வேந்திரன் ஆகிய 3 போலீஸார் மது விற்பனையில் ஈடுப்பட்ட நபர்களிடம் அடிக்கடி பேசியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை தடுக்காமல், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் அவர்களிடம் இருந்து ஆதாயம் அடைந்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, திருவாரூர் மாவட்ட எஸ்.பி கருண் கரட் மூன்று போலீஸாரையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க