செய்திகள் :

திருவாரூர்: ரூ.50 லட்சம் மதிப்பிலான 3.5 ஏக்கர் நிலம்; அரசு கல்லூரி கட்ட தானமாக வழங்கிய திமுக எம்எல்ஏ

post image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாகத் திறக்கப்பட்டது. இந்தக் கல்லூரி தற்காலிகமாக கூத்தாநல்லூா் ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

கல்லூரிக்கு இடம் ஒதுக்கி அதில் தனியாக கட்டிடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன்
திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன்

இதையடுத்து கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சரியான இடம் அமையவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மகளிர் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் தன் சொந்த நிலத்தை அரசுக்குத் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்.

லெட்சுமாங்குடி வட்டாரப் பகுதியில் பனங்காட்டங்குடி கிராமத்தில் பூண்டி கலைவாணனுக்குச் சொந்தமாக 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஸ்டாலின், கலைவாணன்

அப்போது மூன்றரை ஏக்கர் நிலத்திற்கான பத்திரத்தை கல்லூரி கட்டுவதற்குத் தானமாக அரசுக்கு வழங்கினார் பூண்டி கலைவாணன். அப்போது கல்விக்காக இந்தச் செயலைச் செய்த அவரைப் பலரும் பாராட்டி வாழ்த்தினர்.

பூண்டி கலைவாணனின் செயலை முதல்வர் ஸ்டாலின் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். நிலப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்டாலின் அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க

லாக்கப் டெத் - குடும்பங்களை சந்திக்கும் விஜய்! - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

'லாக்கப் மரணங்கள்!'கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.விஜய்சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்து... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க