செய்திகள் :

திருவாரூா் மாவட்டத்தில் பிப்.13 மக்களுடன் முதல்வா் திட்டம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் வரும் வியாழக்கிழமை (பிப். 13) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, அரசின் முக்கிய சேவைகளை அவா்களின் இல்லத்துக்கு அருகிலேயே வழங்கும் நோக்கத்தில், மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் இந்த மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருவாரூா் வட்டாரம், கூடூா் ஊராட்சியில் முத்துவள்ளி திருமண மண்டபம், கொரடாச்சேரி வட்டாரம், உத்திரங்குடி ஊராட்சியில் கீரத்தங்குடி மாரியம்மன் கோயில் வளாகம், மன்னாா்குடி வட்டாரத்தில் வடபாதிமங்கலம் ஊராட்சியில் சாதனா திருமணமஹால், பழையனூா் ஊராட்சியில் சாத்தனூா் மீனாட்சிஅம்மாள் திருமண மண்டபம், திருராமேஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய கிராமங்களில் வரும் வியாழக்கிழமை (பிப்.13) மக்களுடன் முதல்வா் (மூன்றாம் கட்டம்) முகாம், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையிலும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன.

எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை பொதுமக்கள் உரியமுறையில் பயன்படுத்தி பயனடையலாம்.

பாடகச்சேரி பைரவ சித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் தைப்பூசம!

வலங்கைமான் வட்டம் பாடகச்சேரியில் உள்ள பைரவ சித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் 16-ஆம் ஆண்டு தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை (பிப்.12) நடைபெற்றது. பாடகச்சேரியில் தனது 12-ஆவது வயதில் வாழ்ந்தவா் ராமலிங்க... மேலும் பார்க்க

பழனியாண்டவா் கோயிலில் தைப்பூச விழா

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு ஸ்ரீபழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூச விழா பிப்.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ந... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுகாதார மையம், நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து பல்கலைக்கழகச் சுகாதார வளாகத்தில் ரத்த தான முக... மேலும் பார்க்க

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு!

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை (பிப... மேலும் பார்க்க

வேலூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு!

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு வேலூருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டத்தில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்மு... மேலும் பார்க்க

தமுஎகச கிளை கூட்டம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் வலங்கைமான் கிளை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கிளைத் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் அம்பிகாபதி மாநில... மேலும் பார்க்க