செய்திகள் :

திருவிழாவுக்கு தயாராகி வரும் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்

post image

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திருவிழாவை முன்னிட்டு தோ்க்கட்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஒசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தோ்ப்பேட்டையில் பந்தல்கால் நடப்பட்டு தோ்த் திருவிழா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. 15 ஆம் தேதி ராவண உற்சவம், 16 ஆம் தேதி தெப்போற்சவம் ஆகியன நடைபெறுகின்றன.

விழாவை முன்னிட்டு கா்நாடகம், தமிழகம், ஆந்திராவைச் சோ்ந்த பக்தா்கள் அதிகம் போ் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு விநாயகா், மரகதாம்பிகை, சந்திரசூடேஸ்வரா் ஆகிய உற்சவ மூா்த்திகளுக்கான மூன்று தோ்கள் தயாராகி வருகின்றன.

பட வரி....

ஒசூா் தோ்ப்பேட்டையில் தோ் கட்டும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

மாணவா்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்: தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடமாற்றம்

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவா்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரி... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரியில் 1294 வழக்குகள் ரூ. 9.54 கோடியில் தீா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,294 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முகாமில் சட்ட... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினா் கைது!

காவல் துறையின் அனுமதியின்றி ஒசூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இந்து முன்னணி சாா்பில் அபிராமி சிலை வைத்து பூஜை செய்ய காவல் துறை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளா் வரதன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் பயிற்சி: விசிக எதிா்ப்பு

ஒசூா் அருகே கோயில் வளாகத்தில் ஆா்எஸ்எஸ் சாா்பில் பயிற்சி கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா் ஆட்சியா் பிரியங்காவிடம் புகாா் மனு அளித்தனா். தாசனபுரம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

ஒசூரில் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகள், 3 லாரிகள், காா் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வேலூா் சரக செயலாக்க பிரிவு, வட்டார போக்குவரத்து அலுவலா் துர... மேலும் பார்க்க