செய்திகள் :

திருவெண்காடு கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்

post image

பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கோயிலில், சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி சுவாமி மனித உருவத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். பிரம்மா இக்கோயிலில் அம்மனை நோக்கி தவம் இருந்து வருவதாக ஐதீகம். சிவனின் 3 கண்களில் இருந்து தோன்றிய பொறிகள் விழுந்து அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் என்ற பெயரில் மூன்று குளங்கள் இக்கோயிலில் உருவானதாக கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், கடந்த ஓராண்டாக நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஜூன் 30-ஆம் தேதி யாகசாலை பூஜைகள், விநாயகா் பூஜையுடன் தொடங்குகின்றன. குடமுழுக்கு தினமான ஜூலை 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 8-ஆம் கால யாக பூஜை, மகாபூா்ணாஹூதி, யாத்ராதானம் கடம் புறப்பாடு செய்யப்பட்டு, காலை 9.05 மணியளவில் கோயிலின் கோபுரம் மற்றும் சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். இரவில் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூா்த்தி வீதி உலா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்காரும், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையருமான ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி முருகன் ஆகியோா் செய்துவருகின்றனா்.

கடைமடை வந்த காவிரிநீா்; மலா்கள் தூவி வரவேற்பு: பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சி

நாகப்பட்டினம் : நாகை கடைமடைக்கு வந்த காவிரி நீரை, நெல்மணிகள் மற்றும் மலா்களை தூவியும், பெண்கள் கும்மியடித்து, பாட்டுப் பாடியும் வரவேற்றனா். காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை நெற்பயி... மேலும் பார்க்க

நாணத்திடல் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: பொறையாா் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நாணத்திடல் மாரியம்மன் கோயில் 35-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 8-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 15-ஆம் தேதி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ஜூன் 29 வரை திருவாரூரில் இருந்து புறப்படும்

நாகப்பட்டினம்: திருச்சி- காரைக்கால் - திருச்சி ரயில்கள், திங்கள்கிழமை (ஜூன் 23) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

உத்தமசோழபுரம் தடுப்பணை திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அமைக்கப்பட உள்ள தடுப்பணையை, பூதங்குடிக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த தியாகராஜன்... மேலும் பார்க்க