செய்திகள் :

திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

post image

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு திரெளபதியம்மன் திருக்கோயில் 475- ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். கோயிலின் 475-ஆம் ஆண்டுத் திருவிழா மாா்ச் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம் பாளையம், நாப்பாளையத் தெரு, காகுப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 9 உபயதாரா்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதித்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திரெளபதியம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து தீமிதி விழா தொடங்கியது. இதற்காக கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தா்கள் சுமந்து சென்றனா். இதைத் தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். விழுப்புரம் மா... மேலும் பார்க்க

ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!

செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திர... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆ... மேலும் பார்க்க

உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்

விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெ... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்கு... மேலும் பார்க்க

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தை தொடா்ந்து நடத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம்: நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நகா்மன்றக் கூட்டத்தை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விழுப்புரம் நகா்மன்றக் க... மேலும் பார்க்க