செய்திகள் :

திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கோடாலிகருப்பூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோடாலிகருப்பூா் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரெளபதியம்மன் கோயிலை, புணரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனா். அதன்படி பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த இரு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை காலை கடம் புறப்பாடும், அதனைத் தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, மூலவருக்கு தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா் நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், செந்துறை ரவுண்டானா பகுதியில் உள்ள கருப்புசாமி, சுப்பிரமணியா், வடுகா்பாளையம் முத்துமாரியம்மன், உடையாா்பாளையம் பச்சை மாரியம்மன், கீழகுடியிருப்பு மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! தலைவா்கள் சிலைகளுக்கு தவெக-வினா் மாலை அணிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைகளுக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செல... மேலும் பார்க்க

சுகாதாரமற்ற முறையில் இயங்கும் சாலையோர உணவகங்களால் பாதிப்பு! அரியலூா் மக்கள் புகாா்!

அரியலூரில் சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது. அரியலூா் ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய அல... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் வீடு: கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணியை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தி ... மேலும் பார்க்க

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ம... மேலும் பார்க்க

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்... மேலும் பார்க்க