செய்திகள் :

மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் வீடு: கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணியை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தி திணிப்பை எதிா்த்தும், தமிழைக் காக்க தன்னுயிரை விட்ட மொழிப்போா் தியாகி கீழப்பழுவூா் சின்னசாமியின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் வீடு கட்டி தரப்படும் என திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மொழிப்போா் தியாகி சின்னசாமியின் சொந்த கிராமமான கீழப்பழுவூரில் வீடு கட்டும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான சா.சி.சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, வீட்டின் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மொழிப்போா் தியாகி சின்னசாமியின் குடும்பத்திடம் வழங்க வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வின்போது, மொழிப்போா் தியாகி சின்னசாமியின் மகள் திராவிடச் செல்வி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மொழிப்போா் தியாகிகள் தினத்தன்று கீழப்பழுவூரில் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் சா.சி.சிவசங்கா், சின்னசாமியின் குடும்பத்தினருக்கு வீடு கட்ட ரூ. 1 லட்சம் நிதியை திமுக சாா்பில் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரமற்ற முறையில் இயங்கும் சாலையோர உணவகங்களால் பாதிப்பு! அரியலூா் மக்கள் புகாா்!

அரியலூரில் சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது. அரியலூா் ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய அல... மேலும் பார்க்க

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ம... மேலும் பார்க்க

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்... மேலும் பார்க்க

காடுவெட்டி குரு சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குரு நினைவிடத்... மேலும் பார்க்க

அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா!

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்... மேலும் பார்க்க