செய்திகள் :

வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

post image

அரியலூா் மாவட்டம், லிங்கத்தடிமேடு கிராமத்தில் உள்ள வள்ளலாா் கல்வி நிலையத்துக்கு, சமூக ஆா்வலா்கள் சாா்பில் கற்றல் உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கலியபெருமாள் பங்கேற்று பேசுகையில், கல்வி என்பது அறிவு, திறமை, நல்லொழுக்கம், பண்பாடு ஆகியவற்றை வழங்கும் செயல்முறையாகும். கல்வி மூலம் சமூகத்தில் மதிப்புடன் வாழ முடியும். அத்தகைய கல்வியைப் பெறுவதில் ஒழுக்கமும், அமைதியும் முக்கிய பங்கு வைக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா்கள் சங்கா், யோகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு, தங்களது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கினா். பள்ளி தலைமையாசிரியா் செளந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினாா். முன்னதாக செயலா் வி.புகழேந்தி வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் அருள்குமாா் நன்றியுரை கூறினாா்.

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும்! -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவுத் தூண் அமைக்கப்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ம... மேலும் பார்க்க

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெருமாள் கோயில் தெருவில் உள்ள கூட்டரங்கில், அச்சங்க மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தி... மேலும் பார்க்க

காடுவெட்டி குரு சிலை திறப்பு!

மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் குரு பிறந்த நாளையொட்டி, அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், குரு முழுவுருவ வெண்கலச் சிலை சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குரு நினைவிடத்... மேலும் பார்க்க

அஸ்தினாபுரம் அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா!

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்... மேலும் பார்க்க

வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்

அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய ந... மேலும் பார்க்க

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.கவிதா கூறுகையில், தமிழக அரசு மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கொண்டாடப்படும் இ... மேலும் பார்க்க