அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.கவிதா கூறுகையில், தமிழக அரசு மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கொண்டாடப்படும் இப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகிக்கிறாா். போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் நூற்றாண்டு விழா சுடரேற்றி தொடக்கி வைத்து விழா பேரூரையாற்றுகிறாா்.
மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனா்.
மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா், கல்வி மாவட்ட அலுவலா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், கல்வி மேலாண்மைக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா் என்றாா்.