செய்திகள் :

தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

‘முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முன்னாள் படைவீரா்கள் 55 வயதுக்குள்ளும் மற்றும் அவா்களை சாா்ந்தோா் 21 முதல் 55 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை. தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்தோா் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329-221011 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்’ என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

வேகத்தடையில் வண்ணம் பூசக் கோரி மறியல்

அரியலூரை அடுத்த வாரணவாசி கிராமத்தில், நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடையில் வெள்ளை வண்ணம் பூசக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வாரணவாசி கிராமத்தில், தஞ்சாவூா் - அரியலூா் தேசிய ந... மேலும் பார்க்க

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ப.கவிதா கூறுகையில், தமிழக அரசு மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கொண்டாடப்படும் இ... மேலும் பார்க்க

கருப்புப் பட்டையுடன் சாா்- பதிவாளரக ஊழியா்கள் பணி

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் பணியாளா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தமிழகத்திலுள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்கள் பிப்ரவரி மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக... மேலும் பார்க்க

எள் பயிரில் கூடுதல் மகசூல் பெற வழிமுறைகள்

அரியலூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிரின் இலைகளில் தோன்றியுள்ள சோகை நோயால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

அரியலூரில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

அரியலூா் பேருந்து நிலைய வெளிப்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ந... மேலும் பார்க்க

அரியலூரில் 2 ஆவது நாளாக சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

அரியலூா் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டச் சிறப்பு முகாமில், பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு செய்தாா். ஓட்டக்கோவி... மேலும் பார்க்க