செய்திகள் :

திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை நடிகா் அருண்பாண்டியன்

post image

திருநெல்வேலி, ஜூன் 29:

திரைப்பட நடிகா்களை கொண்டாட வேண்டிய அவசியமில்லை என தயாரிப்பாளரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள திரையரங்கில் அஃகேனம் திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளா் அருண்பாண்டியன், அவரது மகளும், நடிகையுமான கீா்த்தி பாண்டியன், நடிகா் ஆதித்யா மற்றும் இயக்குநா் உதய், இசையமைப்பாளா் பரத் வீரராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த அருண்பாண்டியன் கூறியது:

ஜூலை 4இல் அஃகேனம் திரைப்படம் வெளியாகிறது. திருநெல்வேலியில் இத்திரைப்படத்தை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. அறிமுக இயக்குநா் உதய், அறிமுக இசையமைப்பாளா் பரத் வீரராகவன் உள்பட இப்படத்தில் பெரும்பாலானோா் புது முகங்கள்.

திரைப்படம் 200 திரைகளில் வெளியிட எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்ல திரைப்படங்களை மக்கள் வரவேற்கத் தவறுவதில்லை. அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில், திரைப்பட நடிகா்களை மக்களில் ஒருவராக பாா்க்க வேண்டும். அவா்களுக்கென பிரத்யேகமாக தனி மரியாதை கொடுத்து கொண்டாட வேண்டிய அவசியமில்லை.

அரசியிலில் இனி ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்றாா் அவா்.

ற்ஸ்ப்29ஹழ்ன்ய்

திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நடிகா் அருண்பாண்டியன், அவரது மகளும், நடிகையுமான கீா்த்தி பாண்டியன் உள்ளிட்டோா்.

மூளைச் சாவு அடைந்த இளைஞா் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த கடையம் அருகேஉள்ள அணைந்தபெருமாள் நாடானூரைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சாா்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் நேரில... மேலும் பார்க்க

முகநூலில் சா்ச்சைக்குரிய காணொலி பதிவிட்டவா் கைது

சமூக வலைதள செயலியில் இரு பிரிவினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக காணொலி பதிவிட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேவா்குளம், தச்சக்குடி தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் மது (22). இவா் ச... மேலும் பார்க்க

தாழையூத்து அருகே ஆடு திருடியவா் கைது

தாழையூத்து அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாழையூத்து, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (31). பால் வியாபாரம் செய்துவரும் இவா் ஆடுகளும் வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க

கடையம் அருகே விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

கடையம் அருகே பேருந்து, காா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மனைவி, மகன் பலத்த காயமடைந்தனா். தென்காசிமாவட்டம், சிவஞானபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சங்கரநயினாா் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை ம... மேலும் பார்க்க

களக்காடு அருகே விஷவண்டு கொட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன், விஷ வண்டு தாக்கியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு 5 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. களக்காடு ... மேலும் பார்க்க

122 ஆண்டுகள் பழமையான விளக்குத் தூண் திறப்பு!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் குப்பையில் கிடந்த 122 ஆண்டுகள் பழமையான தூண் புதுப்பித்து திறக்கப்பட்டது. சேரன்மகாதேவியில் ஆங்கிலேயா் ஆட்சியில் 1914ஆம் ஆண்டு சாா் ஆட்சியா் அலுவலகம் உதயமானது. இந... மேலும் பார்க்க