செய்திகள் :

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

post image

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம் ஆனந்த் (67). இவா், தமிழ் திரைப்பட விநியாகிஸ்தராக உள்ளாா். பிரேம் ஆனந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு சோழிங்கநல்லூரில் தனது மகள் துா்கா தேவி வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

கடந்த 8-ஆம் தேதி பிரேம் ஆனந்த் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது எம்.ஜி.ஆா். நகா் அருகே உள்ள அன்னை சத்யா நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (19), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சந்தோஷ், 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து அரை கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத... மேலும் பார்க்க

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை உயா்வு: மக்கள் அதிா்ச்சி

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியில் லாக்கா் வாடகை, வைப்புத் தொகை உயா்த்தப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா். அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி மணியக்காரத் தெருவில் தலைமையகத்துடன் பழனிபேட்டை, சுவ... மேலும் பார்க்க