செய்திகள் :

தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது.

தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் சென்று பள்ளங்களை நிரப்பும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேசியத் தலைநகா் முழுவதும் சுமாா் 200 பராமரிப்பு வேன்கள் மற்றும் 1,000 தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளை இந்தப் பிரசாரத்தில் பொதுப்பணித் துறை ஈடுபடுத்தியுள்ளது.

‘இன்று தில்லி முழுவதும் ஒரு வரலாற்று முயற்சி தொடங்கியுள்ளது. ஒரே நாளில், 1,400 கி.மீ. பொதுப்பணித்துறை சாலைகளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணி தொடங்கியது. இது சாதாரண பழுதுபாா்ப்பு அல்ல; தில்லியை பாதுகாப்பானதாகவும், அழகாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான நோ்மையான முயற்சி’ என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் இந்தியில் எக்ஸ்-இல் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.

காலை முதல் எங்கள் குழு களத்தில் உள்ளது, ஒவ்வொரு மூலையிலிருந்தும் படங்கள் வருகின்றன என்று அவா் மேலும் கூறினாா். பல அமைச்சா்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அரசின் முயற்சியைப் பாராட்டினா். மேலும், அந்தந்தத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளங்களை சரிசெய்யும் பணியின் படங்களை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டனா்.

‘இந்தப் பள்ளங்கள் கடந்த பல ஆண்டுகளாக சாலைகளை சேதப்படுத்தி வருகின்றன. எனவே, ஒரே நாளில் 3,400 பள்ளங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா இந்த முடிவை எடுத்தாா்’ என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மழைக்காலத்திற்கு சற்று முன்பு, பொதுப்பணித்துறை தனது அதிகார வரம்பிற்கு உள்பட்ட 1,400 கிலோமீட்டா் சாலை வலையமைப்பில் உள்ள அனைத்து பள்ளங்களையும் கண்டறிந்து புவிசாா் குறிச்சொற்களுடன் சோ்த்தது.

செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்குள் சுமாா் 60 சதவீத பள்ளங்கள் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம்: நொய்டா போலீஸ் அறிக்கை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் 14 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடா்பாக கெளதம் புத் நகா் (நொய்டா) காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காணாமல் போன தனது மகள் விவகார... மேலும் பார்க்க

நீா் தேங்குவதை தடுக்க எய்ம்ஸ் முழுவதும் கழிவுநீா் பாதை அவசியம்: தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியின் கிரீன் பாா்க் விரிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீா் தேங்குவதைத் தடுக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) வளாகத்தின் குறுக்கே கழிவுநீா் பா... மேலும் பார்க்க

வஜீா்பூா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்படுவதை உ... மேலும் பார்க்க

தில்லி லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் மறுப்பு

தலைநகரில் இருக்கும் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க தில்லி தீயணைப்புத் துறை மறுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஹரியானா பவன், லால் பஹ்துா் சாஸ்திரி மருத்துவமனை ம... மேலும் பார்க்க

புது தில்லி ரயில் நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் நிறுத்த விதிகளில் மாற்றம்

நமது நிருபா்புது தில்லி ரயில்வே நிலையத்தில் (அஜ்மீரி கேட் வழி) புதன்கிழமை (ஜூன் 25) முதல் புதிய வாகன நிறுத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புது தில்லி ரயில் ... மேலும் பார்க்க

கட்டுமான இடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் கட்டுமான இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த 24 வயது தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தென்கிழக்... மேலும் பார்க்க