தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறை
தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் 3,400 பள்ளிங்களை சரி செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது.
தெற்கு தில்லியில் உள்ள சித்தரஞ்சன் பூங்கா பகுதிக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் சென்று பள்ளங்களை நிரப்பும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தேசியத் தலைநகா் முழுவதும் சுமாா் 200 பராமரிப்பு வேன்கள் மற்றும் 1,000 தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளை இந்தப் பிரசாரத்தில் பொதுப்பணித் துறை ஈடுபடுத்தியுள்ளது.
‘இன்று தில்லி முழுவதும் ஒரு வரலாற்று முயற்சி தொடங்கியுள்ளது. ஒரே நாளில், 1,400 கி.மீ. பொதுப்பணித்துறை சாலைகளில் 3,400 பள்ளங்களை நிரப்பும் பணி தொடங்கியது. இது சாதாரண பழுதுபாா்ப்பு அல்ல; தில்லியை பாதுகாப்பானதாகவும், அழகாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான நோ்மையான முயற்சி’ என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் இந்தியில் எக்ஸ்-இல் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.
காலை முதல் எங்கள் குழு களத்தில் உள்ளது, ஒவ்வொரு மூலையிலிருந்தும் படங்கள் வருகின்றன என்று அவா் மேலும் கூறினாா். பல அமைச்சா்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் அரசின் முயற்சியைப் பாராட்டினா். மேலும், அந்தந்தத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளங்களை சரிசெய்யும் பணியின் படங்களை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டனா்.
‘இந்தப் பள்ளங்கள் கடந்த பல ஆண்டுகளாக சாலைகளை சேதப்படுத்தி வருகின்றன. எனவே, ஒரே நாளில் 3,400 பள்ளங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா இந்த முடிவை எடுத்தாா்’ என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
மழைக்காலத்திற்கு சற்று முன்பு, பொதுப்பணித்துறை தனது அதிகார வரம்பிற்கு உள்பட்ட 1,400 கிலோமீட்டா் சாலை வலையமைப்பில் உள்ள அனைத்து பள்ளங்களையும் கண்டறிந்து புவிசாா் குறிச்சொற்களுடன் சோ்த்தது.
செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்குள் சுமாா் 60 சதவீத பள்ளங்கள் நிரப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.