செய்திகள் :

தில்லியில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம், 2 பேர் பலி

post image

தலைநகர் தில்லியில் குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு தில்லியின் ரோகிணிப் பகுதியில் உள்ள ஜுக்கி கிளஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

காவல்துறையின் கூற்றுப்படி, 400க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.

இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

தீயை அணைக்க தற்போது தீயணைப்பு வீரர்கள் முயற்சிக்கின்றனர். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை நடந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

போலீஸ் மற்றும் தீயணைப்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது, ​​குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ரோகிணி துணை காவல் ஆணையர் அமித் கோயல் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க