செய்திகள் :

தில்லியில் சூடுபிடிக்கும் தேர்தல்: பாஜக - ஆம் ஆத்மி இதற்டையே போஸ்டர் போர்!

post image

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி - பாஜக இடையே போஸ்டர் போர் வலுத்துள்ளது.

பாஜகவின் கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பற்றி ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தில் வரும் அரக்க ராஜாவின் படத்துடன், முகத்தை மட்டும் ரமேஷ் பிதுரியுடையதை இணைத்து, பாஜகவின் அட்டூழியக்காரர், முதல்வர் முகம் என்று பதிவிட்டுள்ளது.

சும்மா இருக்குமா என்ன பாஜக. சொந்தமாக போஸ்டர் அடித்து ஆம் ஆத்மியை காலி செய்திருக்கிறது. ஷீஷ்மஹாலில் வசிக்கும் ஆம் ஆத்மி ராஜா, துரத்தப்பட வேண்டியவர் என்பதை தில்லி மக்கள் முடிவு செய்வார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட போஸ்டரில், மிக மோசமான கட்சியின் மோசமான வேட்பாளர் என்று வர்ணித்து போஸ்டர் வெளியிட்டிருந்தது.

அதில், பாஜகவின் மூத்த தலைவர்களான அமித் ஷா, நட்டா, ரமேஷ் பிதுரி உள்ளிட்டவர்களின் புகைப்படங்களையும், அவர்கள் சொன்ன மோசமான கருத்துகளையும் வெளியிட்டு போஸ்டர் அடித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தது. இப்படி, தில்லியில் பிரசாரம் சூடுபிடித்ததோ இல்லையோ, போஸ்டர் போர் தீவிரமடைந்துள்ளது. தில்லி மக்களுக்கும், போஸ்டர் கிரியேட்டர்களின் உருவாக்கத் திறன் பிடித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.

தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தேர்தலும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 4 பெயர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.ஜனவரி 11 அன்று நடந்த கூட்டத்தில், ரேணு... மேலும் பார்க்க

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட ... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க