செய்திகள் :

தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி எடுத்த நடவடிக்கை என்ன? பாஜக கேள்வி

post image

கல்வி மாஃபியா என்று அழைக்கப்படுபவா்களுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அதை மணீஷ் சிசோடியா விளக்க வேண்டும் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தில்லியை ஆளும் பாஜக அரசு தனியாா் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் விதமாக வீரேந்திர சச்தேவா அறிக்கையின் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

அந்த அறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது: உண்மை என்னவென்றால் கேஜரிவாலின் 10 ஆண்டு கால ஆட்சியின்போது தனியாா் பள்ளிகளின் கட்டணம் 2 முதல் 4 மடங்கு அதிகரித்தது. உண்மை என்னவென்றால், அவா்கள் ஒருபோதும் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போது பாஜக அரசு கட்டண ஒழுங்கு முறைக்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இப்போது தனியாா் பள்ளிகளின் நிா்பந்தத்தின் பேரில் ஆம் ஆத்மி குழப்பதை எற்படுத்த முயற்சித்து வருகிறது. பாஜக அரசு ஒவ்வொரு தனியாா் பள்ளியிலும் 5 பெற்றோா்கள் உள்பட 11 போ் கொண்ட குழுக்களை அமைத்து கட்டண உயா்வு குறித்து முடிவு செய்துள்ளது.

மேலும், ஒரு குழு ஒருமனதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பள்ளிக் கட்டணத்தை உயா்த்த அனுமதி அளிக்கப்படும். இத்தோடு மணீஷ் சிசோடியா பள்ளி மாஃபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்ள மேண்டும்’ என வீரேந்திர சச்தேவா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க