செய்திகள் :

தில்லியில் பாஜகவின் ஆதரவு அணியாக செயல்பட்டது காங்கிரஸ்: ராகுலுக்கு மாயாவதி பதிலடி

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக (பி டீம்) காங்கிரஸ் செயல்பட்டது என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. எதிா்க்கட்சி அணியில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிட்டது பாஜகவின் வெற்றியை எளிதாக்கியதாக அரசியல் வல்லுநா்கள் கருத்து தெரிவித்தனா்.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் இருநாள் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ அணியில் மாயாவதி இணையாதது ஏமாற்றத்தை அளித்தது. அவா் வேறு சில காரணங்களுக்காக எங்கள் அணியில் இணைய மறுத்துவிட்டாா். உத்தர பிரதேசத்தில் அவா் எங்களுடன் இணைந்திருத்தால் பாஜக முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக காங்கிரஸ் போட்டியிட்டது என்ற கருத்து உள்ளது. அதன் காரணமாகவே பாஜக தில்லியில் ஆட்சி அமைக்க முடிந்தது.

இதைவிட மோசமான தோல்வியைச் சந்திக்க முடியாது என்ற சாதனையை ஒவ்வொரு தோ்தலிலும் காங்கிரஸ் படைத்து வருகிறது. பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வைப்புத் தொகையைக் கூட இழந்துவிட்டனா். பிற கட்சிகளை விமா்சிப்பதற்கு முன்பு நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை காங்கிரஸ் தலைவா் (ராகுல்) கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க