பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்ப...
தில்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தலைநகரின் துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்களன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன, இதனால் பள்ளி நிா்வாகமும் மாணவா்களை வீட்டுக்கு அனுப்பினா். பின்பு தீவிர ஆய்வுக்கு பின்பு, இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரிய வந்தது.
தில்லி பப்ளிக் ஸ்கூல் (டிபிஎஸ்) மாடா்ன் கான்வென்ட் பள்ளி மற்றும் ஸ்ரீ ராம் வோ்ல்ட் பள்ளி ஆகியவற்றுக்கு மிரட்டல்கள் வந்ததாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா், காலையில் மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்கள் வந்தன. வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய் படை உள்பட தில்லி காவல்துறையின் பல குழுக்கள் 3 பள்ளிகளுக்கும் விரைந்தன. இந்த அச்சுறுத்தல்கள் போலியானவை என்று போலீசாா் அறிவிப்பதற்கு முன்பு ஒரு முழுமையான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
‘தேடுதல் நடவடிக்கை நிறைவடைந்தது, சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை‘ என்று அந்த அதிகாரி கூறினாா், சைபா் தடயவியல் குழுக்கள் அனுப்புநரின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளன. பின்பு டி. பி. எஸ். துவாரகா பள்ளி பின்னா் மூடப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையில், ‘தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக திங்களன்று பள்ளி மூடப்பட்டுள்ளது. பள்ளி பேருந்துகள் மற்றும் தனியாா் வேன்களில் பயணிக்கும் மாணவா்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுகிறாா்கள். பெற்றோா்கள் அந்தந்த பேருந்து நிறுத்தங்களில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்’ என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் தகவலின்படி, சைபா் செல் மற்றும் சிறப்பு போலீஸ் படை உள்பட பல பிரிவுகள் மின்னஞ்சல் தலைப்புகள் மற்றும் பிற டிஜிட்டல் கால்தடங்களை பகுப்பாய்வு செய்து மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்ப்பபடுகிறது என்பதனை கண்டறிந்து வருகின்றன.
போலீஸ் தரவுகளின்படி, ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், டெல்லி-என். சி. ஆா் முழுவதும் சுமாா் 74 கல்வி நிறுவனங்களின் 70 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு இதேபோன்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த சம்பவங்கள் அனைத்தும் முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு போலியானவை என்று அறிவிக்கப்பட்டாலும், ஒவ்வொரு வழக்கும் முழு தீவிரத்துடன் கையாளப்படுகின்றன.
‘இவை போலியானவை என்றாலும், அவை மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் இருப்பவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு தடத்தையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம் ‘என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.
முந்தைய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல்கள் ஒருங்கிணைந்த முறையின் ஒரு பகுதியா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா். உதவி பெறாத தனியாா் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் நடவடிக்கைக் குழுவின் தலைவா் பாரத் அரோரா, மீண்டும் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் ’மிகவும் கவலைக்குரியவை’ என்று விவரித்தாா்.
‘ ‘இந்த அச்சுறுத்தல்கள் கல்வி அட்டவணையில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்துகின்றன, மேலும் மாணவா்கள், அவா்களது குடும்பங்கள் மற்றும் கல்வியாளா்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன‘ ‘என்று அவா் கூறினாா்‘.