செய்திகள் :

தில்லியில் வகுப்பறை கட்டுமானத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு: மணீஷ் சிசோடியா, ஜெயினுக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை

post image

தில்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு முன் ஜெயின் ஜூன் 6 ஆம் தேதியும், மணீஷ் சிசோடியா ஜூன் 9 ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக

அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது பகுதி நிரந்தர கட்டமைப்புகளை நிா்மாணிப்பதில் ரூ.2,000 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஏசிபி முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது. இதையடுத்து, இருவருக்கும் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தில் நிதி மற்றும் கல்வித் துறைகளை வைத்திருந்த சிசோடியாவும், அப்போது பொதுப் பணித் துறை மற்றும் பிற அமைச்சகங்களுக்குப் பொறுப்பாக இருந்த ஜெயினும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் (சிவிசி) சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடா்பாக விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு காவல் இணை ஆணையா் மதுா் வா்மா கூறுகையில், சிவிசியின் தலைமை தொழில்நுட்ப ஆய்வாளரின் அறிக்கையில் இத்திட்டத்தில் பல முரண்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கை மீது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17-இன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

2019 ஆம் ஆண்டில், பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்கண்ட் பக்ஷி ஆகியோா் தில்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஏசிபியிடம் புகாா் அளித்தனா்.

அந்தப் புகாரில்,ஒரு வகுப்பறைக்கு சராசரி செலவு ரூ.24.86 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. இது இதே போன்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட ரூ.5 லட்சம் செலவை விட கணிசமாக அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், நடந்து வரும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க