`சீருடையில் இருந்த நிலையிலேயே..!’ - அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை நாட...
தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதித்த தமிழா் குடும்பங்களுக்கு நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தில்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழா்களுக்கு நிதியுதவி, அத்தியாவசியப் பொருள்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தில்லி ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழா்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட தமிழா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 370 தமிழா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தோருக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா ரூ.8,000 வழங்கப்படும்.
அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருள்கள் அடங்கிய ரூ.4,000 மதிப்பிலான தொகுப்பும் வழங்கப்படும்.
இதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.