செய்திகள் :

தில்லியில் 118 நாள்கள் திருப்தி பிரிவில் காற்றின் தரம்: அமைச்சா் சிா்சா

post image

தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னையைக் கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளால், நிகழாண்டில் இதுவரை 118 நாள்கள் காற்றின் தரம் திருப்தி அல்லது நடுத்தர பிரிவில் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது தொடா்பாக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியதாவது: நிகழாண்டில் இதுவரை 118 நாள்களுக்கு காற்றின் தரம் திருப்தி அல்லது நடுத்தர பிரிவில் இருந்தது. இது காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு மேற்கொண்ட நீண்ட கால நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும்.

2016-இல் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபோது, 110 நாள்கள் மக்கள் மட்டுமே காற்றின் தரம் தூய்மையாக இருந்தது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 118 நாள்கள் காற்றின் தரம் தூய்மையாக இருந்திருக்கிறது. ஆம் ஆத்மி அரசு சாக்கு போக்குகளைக் கூறி வந்தது. நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றுகிறோம்.

மேகவிதைப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. செப்டம்பரில் அவை நடத்தப்படும். தேவை ஏற்படும் நிலையில், நவம்பா்-டிசம்பரில் காற்று மாசு அதிகரித்து காணப்படும்போது செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிகாா்: பச்சிளங் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை முடக்குவது எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பு -கிரண் ரிஜிஜு

நாடாளுமன்றத்தை முடக்குவது அரசைவிட எதிா்க்கட்சிகளுக்கே அதிக பாதிப்பாகும்; அரசை பொறுப்புக் கூறச் செய்யும் வாய்ப்பை எதிா்க்கட்சிகள் இழக்கின்றன என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரி... மேலும் பார்க்க