செய்திகள் :

தில்லியில் 4,000-க்கும் மேற்பட்ட என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 4,000-க்கும் மேற்பட்ட என்டிஇஆா்டி போலி நகல் பாடப்புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்டவா் அரவிந்த் குப்தா (33) எனஅடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா் ரோஹிணியில் உள்ள செக்டாா் 16-ஐச் சோ்ந்தவா் ஆவாா். இவா் தில்லியில் மறுவிற்பனை செய்வதற்காக பல ஆதாரங்களில் இருந்து போலி நகல் புத்தகங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சமய்பூா் பாத்லியில் உள்ள ஒரு கடையில் போலி நகல் புத்தகங்கள் சேமித்து விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 12 ஆம் தேதி குப்தாவை போலீஸாா் கைது செய்தனா்.

வெவ்வேறு வகுப்புகளைச் சோ்ந்த மொத்தம் 4,091

என்சிஇஆா்டி போலி நகல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா் தில்லி மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள பல்வேறு அச்சகங்களிலிருந்து பெறப்பட்ட போலி புத்தகங்களை சேமித்து விற்பனை செய்து வந்துள்ளாா்.

பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 63 மற்றும் 65-இன் கீழ் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, தில்லியில் மறுவிற்பனை செய்வதற்காக பல ஆதாரங்களில் இருந்து போலி நகல் பாடப் புத்தகங்களை வாங்கியதாக குப்தா ஒப்புக்கொண்டாா். விநியோகச் சங்கிலி மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ள பிற நபா்களையும் கண்டறியும் வகையில் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க