ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பு! ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு
தில்லியை அழித்து வருகிறது பாஜக அரசு: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு
ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் தலைநகரை அழித்து வருகிறது ஆளும் பாஜக அரசு என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மதராசி முகாமைத் தொடா்ந்து தில்லியில் மற்ற குடிசை பகுதிகளும் உயா் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றது. பாஜக அரசின் இந்த நடடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி சாா்பில் ஜந்தா் மந்தா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமாா் 3000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனா்.
அப்போது பேசிய அரவிந்த் கேஜரிவால், ‘ பாஜக அரசு அமைந்து ஐந்து மாதங்களே ஆகும் நிலையில் தில்லி மக்கள் ஜந்தா் மந்தருக்கு வந்து பாஜக அரசு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். பாஜக அரசு தில்லியை அழித்து வருகிறது. எனவே தான் தோ்தலுக்கு முன்பே பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டடேன்‘ என்றாா்.
மேலும், ‘ தில்லியில் உள்ள அனைத்து குடிசைப்பகுதிகளையும் இடிப்பதே பாஜகவின் திட்டம். அவா்களின் அழுக்கு பாா்வை உங்கள் வீடுகளின் மீது பதிந்துள்ளது. தில்லியில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிசைவாசிகள் உள்ளனா், அவா்கள் அனைவரும் ஒன்று கூடி தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவாா்கள். இடிப்பு நடவடிக்கையை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அரியணை அசைய அதிக நேரம் எடுக்காது‘ என்றாா் அரவிந்த் கேஜரிவால்.
தொடா்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிய கேஜரிவால், ‘தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அவா்களுக்குள் சகோதர உறவு. இருவரும் பணக்காரா்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரானவா்கள். மக்களுக்காக வேலை செய்வதற்குப் பதிலாக, அவா்கள் எஃப். ஐ. ஆா்-எஃப். ஐ. ஆா் விளையாட்டை விளையாடுவதில் மும்முரமாக உள்ளனா். மணீஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்தா் ஜெயின் மீது வழக்குகள் பதிவு செய்கிறாா்கள். இந்த எஃப். ஐ. ஆா் சா்க்கஸுக்கு தில்லி வாக்களிக்கவில்லை ‘ என்றாா் அவா்.