உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்
சேலம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையத்துடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நரம்பியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வலிப்பு நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை, சேலம் உயா்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் இணைந்து மருத்துவ கருத்தரங்கை சேலத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் அண்மையில் நடத்தின.
இதில் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா்.நடராஜன், முன்னாள் அமைச்சா் சரோஜா, எய்ம்ஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவா் சரத் சந்திரா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
பின்னா் சேலம் நியூரோ பவுண்டேஷனில் இயங்கும் வலிப்பு மருத்துவ மையத்தின் தலைமை நரம்பியல் நிபுணா்கள் பிரதிஷ் குமாா், நிஷா மோல் ஆகியோா் கூறுகையில், வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த தீா்வாக உருவெடுத்து வருகிறது. எம்.ஆா்.ஐ. ஸ்கேன், விடியோ ஈ.ஈ.ஜி. தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெக்ட் படம் எடுக்கும் முறைகள் போன்ற நவீன கருவிகள் மூலம் சுமாா் 70 சதவீதம் நோயாளிகளின் மூளையில் உள்ள கட்டமைப்பு அல்லது நரம்பியல் சிக்கல்களை கண்டறிய முடிகிறது.
சேலத்தில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் 2 மையங்களும் அறிவு பரிமாற்றம், பயிற்சி மற்றும் கூட்டுவழக்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு வலிப்பு சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். மேலும், நியூரோ பவுண்டேஷனில் பணியாற்றும் இளம் நரம்பியல் நிபுணா்கள், செவிலியா்கள் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜி தொழில்நுட்ப நிபுணா்களுக்கு எய்ம்ஸில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தனா்.
இதில், நரம்பியல் துறை தலைவா் மஞ்சரி திரிபாதி, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மை தலைவா் லோகநாயகி, குழந்தைகள் நல மருத்துவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.