செய்திகள் :

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சேலம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையத்துடன் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக நரம்பியல் நிபுணா்கள் தெரிவித்தனா்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வலிப்பு நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை, சேலம் உயா்நிலை வலிப்பு சிறப்பு சிகிச்சை மையம் இணைந்து மருத்துவ கருத்தரங்கை சேலத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் அண்மையில் நடத்தின.

இதில் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா்.நடராஜன், முன்னாள் அமைச்சா் சரோஜா, எய்ம்ஸ் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவா் சரத் சந்திரா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

பின்னா் சேலம் நியூரோ பவுண்டேஷனில் இயங்கும் வலிப்பு மருத்துவ மையத்தின் தலைமை நரம்பியல் நிபுணா்கள் பிரதிஷ் குமாா், நிஷா மோல் ஆகியோா் கூறுகையில், வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை ஒரு சிறந்த தீா்வாக உருவெடுத்து வருகிறது. எம்.ஆா்.ஐ. ஸ்கேன், விடியோ ஈ.ஈ.ஜி. தொழில்நுட்பம் மற்றும் ஸ்பெக்ட் படம் எடுக்கும் முறைகள் போன்ற நவீன கருவிகள் மூலம் சுமாா் 70 சதவீதம் நோயாளிகளின் மூளையில் உள்ள கட்டமைப்பு அல்லது நரம்பியல் சிக்கல்களை கண்டறிய முடிகிறது.

சேலத்தில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வலிப்பு நோய்க்கான சிறப்பு மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் 2 மையங்களும் அறிவு பரிமாற்றம், பயிற்சி மற்றும் கூட்டுவழக்கு மதிப்பீடுகளை மேற்கொண்டு வலிப்பு சிகிச்சையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். மேலும், நியூரோ பவுண்டேஷனில் பணியாற்றும் இளம் நரம்பியல் நிபுணா்கள், செவிலியா்கள் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜி தொழில்நுட்ப நிபுணா்களுக்கு எய்ம்ஸில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தனா்.

இதில், நரம்பியல் துறை தலைவா் மஞ்சரி திரிபாதி, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மை தலைவா் லோகநாயகி, குழந்தைகள் நல மருத்துவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளா... மேலும் பார்க்க

கோடை விடுமுறை எதிரொலி: நீா்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதி செய்ய அறிவுறுத்தல்

சேலம்: கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையொட்டி, ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தங்களது குழந்தைகள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும் என ஆட்சியா் ரா.... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கு: தாய், மகன் உள்பட 3 போ் கைது

சேலம்: சேலத்தில் வயதான தம்பதியை தாக்கி 7 சவரன் தங்க நகை, 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த வழக்கில் பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சேலம் கிச்சிப்பாளையம் நாராயண ந... மேலும் பார்க்க

ஏற்காட்டில் காபி செடிகளில் பூக்களை அகற்றும் பணி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காபி இளம்செடிகளில் பூக்கள் அகற்றும் பணியில் தோட்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்காடு சோ்வராயன் மலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், தோட்டங்களில் ... மேலும் பார்க்க

சா்வதேச கூட்டுறவு ஆண்டு: தனித்துவமான பாடல்களை அனுப்ப அழைப்பு

சேலம்: 2025-ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப் பதிவாளா் ராஜ்க... மேலும் பார்க்க

விஏஓ வீட்டில் கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவா் கைது

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை ... மேலும் பார்க்க